சனி, 5 டிசம்பர், 2015

மழையும் மக்களும்

மழையும் மக்களும் 

மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும்   சரி.

இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது

Image result for chennai floods update

வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை  பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்

Image result for chennai floods update

ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம்   வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர்  இந்த மக்கள்

Image result for chennai floods update

ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .

இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்

இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை







2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இறைவனை இகழ்வதை விடுத்து
      இயற்கையை பழிப்பதை விடுத்து
      இயற்கையுடன் இணைந்து வாழ
      கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
      மனித சமுதாயம்

      நீக்கு