வியாழன், 31 டிசம்பர், 2015

புத்தாண்டு சிந்தனைகள் (2016)

புத்தாண்டு சிந்தனைகள் (2016)

வருகின்ற புத்தாண்டில் வாழ்த்துகளை
பரிமாறிக்கொள்ளுவது ஒரு புறம் இருக்கட்டும்.

சில நல்ல பழக்க வழக்கங்களை  கைகொள்ள
முயற்சி செய்வோமாக.

1)புறங் கூறுதலை அடியோடு நிறுத்த வேண்டும்

2)இன்னாத சொற்களை விடுத்து இனிய சொற்களை
பேச பழகவேண்டும்

3)பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்களை செய்யாது
பொறுப்போடு ,விருப்பு வெறுப்பின்றி செயல்பட முயற்சித்தால்
வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

4)எதையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

5)எந்த செயலுக்கும் பிறர் கையை எதிர்பாராது முடிந்தவரை
தானே பணிகளை செய்து முடித்தல்.

6)எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தால்.

7) தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாது இருத்தல்

8)முடித்தால் பிறருக்கு உதவுதல் இல்லையெனில் தொல்லை தராது இருத்தல்.

9) கடமைகளை காலத்தே கருத்தோடு தள்ளிப் போடாமல் முடித்தல்.

10) தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளுதல்

11)முயற்சியின்மைக்கு பிறரை குறை கூறுவதை தவிர்த்தல்

12)சுத்தமான ,சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல்.

13) போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல்.

14) தனி மனித ஒழுக்கம், இறை பக்தி போன்றவற்றை அனுசரித்தல்.



மேற்கண்ட விஷயங்களை  கடைபிடித்தால். புத்தாண்டு ஜோதிட பலன்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆண்டு முழுவதும் நல்ல பலன்களே நடக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக