திங்கள், 2 நவம்பர், 2015

உழைப்பும் உண்மையுமே...

உழைப்பும் உண்மையுமே....


இறைவனையே
காணாத ஒருவன்
அவன் சாட்சியாக
பதவியேற்கிறேன்  என்கின்றான்

மன சாட்சியே  இல்லாது மாபெரும் பாதக
செயல்களை செய்யும் ஒருவன் தன்
மன சாட்சிப்படி கடமையாற்றுவேன் என்று
உறுதி மொழி பகர்கின்றான்.

யாது ஊரே யாவரும் கேளிர்
என்கிறான் ஒரு மேடையில்;

மற்றொரு மேடையிலோ தன் சாதிதான்
உயர்வென்றும் பிறிதொரு சாதியை
மிச்சமின்றி அழித்தொழிப்பேன் என்று
சபதமிடுகின்றான்

சாதி இரண்டொழிய
வேறில்லை என்கின்றான் ஏடுகளிலே

சாதி விட்டு சாதி மாறி மணம்  புரிந்தால்
அவர்களை மரண உலகிற்கு மனம் கூசாமல்
அனுப்பி வைக்கின்றான் துணைக்கு
பல உயிர்களுடன் வீடுகளிலே

சொல்வதொன்றும்
செய்வதொன்றுமாக விளங்கும்
இந்த பச்சோந்திகளை நம்பி தங்களை இழக்கும்
மூடர் கூட்டம்பெருகிவிட்டது இந்நாட்டில்

சிந்திக்கும் திறனற்று அனைத்தையும்
இழந்து அவர்கள் போடும் பிச்சைக்கு
அலையும் கூட்டம் விழிப்பு பெறுவது என்று?

உழைப்பும் உண்மையுமே உயர்வான
வாழ்க்கைக்கு  வித்திடும் என்ற ஒளி
இவர்களின் உள்ளத்தில் ஒளிர்வது எப்போது?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக