செவ்வாய், 24 நவம்பர், 2015

ராமா ராமா என்று நீ பாடு!

ராமா ராமா என்று நீ பாடு!


ராமா ராமா என்று நீ பாடு!





ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 


ராமா ராமா என்று நீ பாடு
ராமா ராமா என்று நீ பாடு

மனமே நீ
ராமா ராமா என்று நீ பாடு  (மனமே நீ )

உலகில் ராம பக்தியில்லாதவரை
கண்டால் விலகி ஓடு  (மனமே நீ )

இகபர சுகங்கள் அளிக்கும் இனிய நாமம்
ஆசை கொண்டலையும் மனம்தனை
அசையாதிறுத்தி  நம்மை திருத்தி
நல்வழிப்படுத்தும் நாமம்

வாதனைகளும்  சோதனைகளும்
வாழ்வில் எத்தனை வந்தாலும்
நமக்கு உற்ற  துணையாய்
வந்து காக்கும் நாமம்  (மனமே நீ )

அரிதாய் கிடைத்த மானிட பிறவிதனை
அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு
அழியாது எளிதாய் ஜபித்து உயர்வடைய
உதவுவது ராம  நாமம் (மனமே நீ )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக