ஞாயிறு, 4 அக்டோபர், 2015

இசையும் நானும்(62)


இசையும் நானும் ( 62)

இசையும் நானும் தொடரில் 
என்னுடைய 62 வது காணொளி 

மவுதார்கன் இசை,

படம் -குழந்தையும் தெய்வமும் பட பாடல் 




அன்புள்ள மான்விழியே 
ஆசையில் ஓர் கடிதம் - நான் 
எழுதுவதென்னவென்றால் - உயிர்க் 
காதலில் ஓர் கவிதை 

அன்புள்ள மன்னவனே 
ஆசையில் ஓர் கடிதம் - அதைக் 
கைகளில் எழுதவில்லை - இரு 
கண்களில் எழுதி வந்தேன் 

நலம் நலம்தானா முல்லை மலரே 
சுகம் சுகம்தானா முத்து சுடரே ( 2 )
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ 
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ 
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ 
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ 
(அன்புள்ள )

நலம் நலம்தானே நீ இருந்தால் 
சுகம் சுகம் தானே நினைவிருந்தால் 
இடை மெலிந்து இயற்கையல்லவா 
நடை தளர்ந்து நாணம் அல்லவா 
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாழ வைத்ததும் உண்மை அல்லவா 
(அன்புள்ள )

எனக்கொரு பாடம் சொன்னவரே 
எனக்கொரு பாடம் கேட்டுக்கொண்டேன் 
பருவம் என்பதே பாடம் அல்லவா 
பார்வை என்பதே பள்ளி அல்லவா 
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் 
இரவு வந்தது நிலவும் வந்தது 
(அன்புள்ள )


காணொளி இணைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக