செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மணியோசை காதில் கேட்டேன்

மணியோசை காதில் கேட்டேன்

மணியோசை 
காதில் கேட்டேன்

மணியோசை
காதில் கேட்டேன்

மனம் மகிழும்
மாலை வேளை

உலகத்தை
காக்கின்ற இறைவன்
உறையும்
இடம்தான் கோயில்




ஒளி வீசும்
தீப சுடரின் முன்னே
மணம்  வீசும் மலர்கள் சூடி
காட்சி தரும் வடிவம்
மனதினில் பதித்துக்கொண்டேன்


மன அமைதியை தந்து
மகிழ்விக்கும் இறைவன் மொழிதான்
ஓங்காரமாய் ஒலிக்கும் நாதம்


அவன் சந்நிதியில் வந்து நின்றேன்
அவன் அடியார்களுடன் கூடி நின்று
உளமுருக அவன் நாமம்  பாடி தொழுதேன்
அனைவரும்  நலமாக வாழ வேண்டி




உலகனைத்தும் வாழ தவம்
செய்து வாழ்ந்த தவ முனிவர்கள்
பாதம் பணிவோம். அவம் பேசாது
அன்போடு சிவ  வாழ்வு வாழ்வோம். 

1 கருத்து: