திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நான் யார் ?(தொடர்ச்சி)(2)

நான் யார் ?(தொடர்ச்சி)(2)





நான் யார் ? என்ற கேள்வியைக் 

யாரிடம் கேட்கவேண்டும்?

யார் பதில் சொல்லுவார்கள் 

கேள்வி கேட்பவர் யார் 

பதில் சொல்பவர் யார் 

நான் யார் யார் என்பதை தெரிந்துகொண்டு என்ன 
ஆகப்போகிறது ?

தெரிந்துகொள்ளவிட்டால் என்ன ஆகும். ?

தெரிந்து கொண்டுவிட்டால்
நம்முடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடுமா ?

வாழ்வில் துன்பம் துயரம் வராமல் எப்போதும் இன்பமாய்
இருந்துவிடுமா ?

நோய் வராமல் இருக்குமா ?

பிறர் நமக்கு தொல்லை தராமல் இருப்பார்களா ?

நாம் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளமுடியுமா ?

தோல்விகள் வாழ்வில் இல்லாமல் எப்போதும் வெற்றி காண முடியுமா?

மரணத்தை வெல்ல முடியுமா?

போன்ற பல கேள்விகள் பலருக்கு எழும்

ஆனால்  எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்

எல்லாம் அப்படியே இருக்கும்

வரும் போகும் அனைவரின் வாழ்வில்

வருவதைப் போல

ஏனென்றால் நம்முடைய இந்த உலக வாழ்வு

நம்முடைய கர்மங்களை அனுபவித்து தீர்ப்பதற்காக

இறைவனால் வழங்கப்பட்டது.

ஆனால் நான் யார் என்பதை உணர்ந்துகொண்டால்.

அனைத்தும் கனவுபோல தோன்றும்.

எப்படி கனவு உண்மையாய் இருப்பதுபோல் தோன்றினாலும்

உண்மை இல்லையோ அதுபோல இவ்வுலக வாழ்வு இருக்கும்

எதுவும் நம்மை பாதிக்காது.

முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக