திங்கள், 27 ஜூலை, 2015

அப்துல் கலாம் -உங்களுக்கு எங்கள் சலாம்

அப்துல் கலாம் -உங்களுக்கு எங்கள் சலாம் 



மதங்களை கடந்தவர்
மாசு மருவற்றவர்

விண்ணில் கணைகளை   ஏவினாலும்
மாணவர்கள் தொடுக்கும் கேள்விக்
கணைகளுக்கும் செவி சாய்ப்பவர்

அலைகடலின் ஓரத்திலே தோன்றி
அகில உலகெங்கும் தன் முயற்சியால்
புகழ் கொடியை  நாட்டியவர்.

அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்தவர்

உயிர் உடலை விட்டு பிரிந்தாலும்
அவர் ஆன்மா இங்குதான் மீண்டும் வரும்
அவர் கண்ட கனவை மெய்யாக்க.

மதம்  என்னும்  குறுகிய  வட்டத்துள்
சிக்கிக்  கொள்ளாதவர்

மாமேதையானாலும்
மண்டைக் கனம்   இல்லாதவர். .

மாணவர்களை நேசித்தவர்,

ஆணவம் கொண்ட
அரசியல்வாதிகளை புறக்கணித்தவர்.



பிறந்த மண்ணின்
 பெருமையை விண்ணிலும்
பரவ செய்தவர்.

குணம் என்னும்
 குன்றேறி நின்றவர்.

என்றும் அவர் புகழ்
இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.


2 கருத்துகள்:

  1. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    உயிர் உடலை விட்டு பிரிந்தாலும்
    அவர் ஆன்மா இங்குதான் மீண்டும் வரும்
    அவர் கண்ட கனவை மெய்யாக்க.

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு