சனி, 27 ஜூன், 2015

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

என்னுடைய இசைப் பயணத்தில் 
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;

இதோ அந்த பாடல்.

அனைத்தையும்  அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )

ஒன்றை ஆக்குவதும்  அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )

பசித்தோர்க்கு  உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )

உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா

கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா  (அ )

கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு

இதை நீ  என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு  (அ)


பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக