வியாழன், 11 டிசம்பர், 2014

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1 )

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1)

பகவத் கீதை இந்துக் கடவுளால் சொல்லப்பட்டதால் மற்ற மதத்தினர்கள் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள்.

உண்மையில் மகாபாரதத்தில் வரும் அர்சுனன் கதாபாத்திரம் ஒரு சராசரி மனிதனின் குழப்பங்களைப் பற்றியது

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அதை அவர்கள் விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த தவறும்போதோ அல்லது தயங்கும்போதோ பிரச்சினை ஏற்ப்படுகிறது.

அது வீட்டிற்குள் என்றால் அது அந்த குடும்பத்தை பாதிக்கிறது

அதுவே ஒரு நாட்டின் தலைவனாக இருந்தால் அது நாட்டை பாதிக்கிறது.

இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலைகளில் இருந்து
எப்படி மீண்டு வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதையே கீதையின் இரண்டாம்  அத்தியாயத்தில் பகவான் கண்ணன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இதற்க்குபோய் மத சாயம் பூசுவது ,வள்ளுவரின் குறளான எப்பொருள் யார் யார் வாய்க்  கேட்பினும்    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கு முரணாகிறது. (இன்னும் வரும்)

2 கருத்துகள்: