திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து என்று அடிக்கடி
ஒரு கூக்குரல் ஏதாவது ஒரு அரசியல் கட்சியால்
தமிழ்நாட்டில் இடைவிடாமல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒரு அபாய சங்கு.

தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கும்
அரசியல் கட்சிகள் தங்கள்
சுய லாபத்திற்காக தனித் தனியாக
அமைப்புக்களை வைத்துக்கொண்டு
தமிழர்களை ஒன்று சேர விடாமல்
பிரித்து வைத்துகொண்டு தமிழர்களை
அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன

மத்திய அரசு அல்லது மாநில அரசுகள்
மக்கள் நலம் கருதி எந்த திட்டத்தை
கொண்டு வந்தாலும், அதற்கு,அரசியல், மொழி, ஜாதி, இனம் என
சாயம்பூசி அதை தடுப்பதிலேயே பொதுவான
குறிக்கோளாய் வைத்திருக்கின்றன

தமிழர்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் ஒருமித்த
குரலை எழுப்புவது கிடையாது. மாறாக ஒருவர்மீது ஒருவர்
குறை கண்டுகொண்டிருப்பதால் தமிழ் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் முடிவு ஏற்படாமல் அப்படியே கிடப்பில்
போடப்பட்டுள்ளன

தமிழர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருப்பதுபோலவும்
மற்றவர்கள் அவர்களை அடிமையாக்கி விடுவதுபோலவும் சுயநல அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு மாயையை உண்டாக்கி வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் சோம்பலை தங்கள் வாழ்வின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் வெளி மாநிலங்களிலிருந்து வரும்
லட்சக்கணக்காண  மக்களுக்கு இங்கு அபரிமிதமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

வெளிமாநில மக்கள்தான் தங்கள் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும்
தமிழ் நாட்டில் வசதியாக வாழ்கிறார்கள்

அவர்கள்தான் பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவன் அவர்களிடம் கூலிக்கு  மாரடிக்கிறான். மெத்தப் படித்த சிலரோ வெளி நாடு சென்று விடுகின்றனர்.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் திறமை இன்மை, லஞ்சம், நாணயமின்மை கொடி கட்டிப்பறக்கிறது.

தமிழ் நாட்டு கனிம வளங்கள்,நதி நீர், நிலம்,வன கடல் வளங்கள் தனியார்களால் சுரண்டப்படுகின்றன , தட்டிக்கேட்க ஆளில்லை.

அடித்தட்டு மக்கள் அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும், அரசு விற்கும்
மதுவுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

அவர்களது   வாழ்வும், எதிர்காலமும் அவர்களின் உடல்நலமும் நாசமாகிகொண்டிருக்கிறது. அரசுக்கு அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும், சுகாதார பிரச்சினைகளும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன .நாடு முழுவதும் புற்றீசல்போல் பெருகிவரும் மருத்துவ மனைகளே இதற்கு சான்று.

சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் தமிழ் மக்களுக்கும் வெகு தூரம்.
அரசு கோடிக்கணக்கான  ரூபாய் செலவில் கிராமந்தோறும் கட்டிகொடுத்த
அனைத்து கழிவறைகளும் பாழ். ஒரு குட்டிசுவர்,பள்ளி சுற்றுசுவர், பேருந்து நிலையம், கோயில் சுற்றுசுவர், ரயில் நிலையங்கள், கடற்கரை என எந்த இடத்தையும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்காமல் அவர்களால் இருக்க முடியாது

அதனால்தான் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி  சொன்னார். இந்திய நாடு ஒரு திறந்த வெளிக்  கழிப்பிடம் என்று.
அவர் சொன்னதில்  சிறிதும்  தவறில்லை.

எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பொது சொத்துக்களை
சூறையாடுவதில் அவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள்.அல்லர்

வாய்சொல்லில் வீரர்கள் பாரதியார் அன்றே பாரதியார் எழுதி வைத்தார்.

எந்த செயலை செய்வதற்கு முன்பும் அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது கிடையாது அதனால்தான் மிக எளிதாக அனைவராலும் ஏமாற்றப்படுகிறார்கள்


 அயல் நாட்டில் வேலைக்கு செல்வதாகட்டும். குறுக்கு  வழியையே
தேர்ந்தெடுத்து அயோக்கியர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்க்கையை  தொலைப்பது  வாடிக்கையாக உள்ளது

அதுபோல்  ,சேர்த்த பணத்தை முதலீடு செய்வதாகட்டும். முன் பின் யோசியாமல் ஏமாற்றுப்பேர்வழிகளின் வாய் ஜால பேச்சுக்களை  நம்பி லட்சக்கணக்கான தமிழர்கள் ஏமாந்தது கணக்கில்லை என்பது அனைவருக்கும் தெரியும்

இருந்தும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை  என்பது அன்றாடம் தொடரும் அவலங்கள். காட்டும்.

தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை முறையாக, பிழையறக் கற்பதுமில்லை,பேசுவதுமில்லை,எழுதுவதுமில்லை, ஆனால் தமிழ் மீது பற்று இருப்பதுபோல் நடிக்கிறார்கள். தமிழை . இவர்களே  கொஞ்சமாக அழித்துவிடுவார்கள்

வீரம் தேவைதான். ஆனால் விவேகம் ,சமயோசித புத்தி,  இல்லாவிட்டால் அனைத்தும் பாழ் என்பதை கண்கூடாக கண்டும் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகம்  எப்போது விழிக்கப்போகிறதோ?

தங்களின் இந்த நிலையை தமிழன் என்று புரிந்துகொள்ளப்போகிரானோ?


2 கருத்துகள்: