ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(4)

புச்சுக் குட்டியும் நானும்(4)

 இப்படியாக எங்களுக்குள் ஒரு 
பந்தம் தொடர ஆரம்பித்துவிட்டது 

காலையில் முதலில்புச்சுக் குட்டிகளை 
பார்த்து குசலம் விசாரித்தபின்தான் 
நான் என் வேலைகளை கவனிக்க செல்வேன். 

அதோடு இரவு வீடு திரும்பியதும் அவைகளைப் பார்த்து ஏதாவது சாப்பிடப் போடுவேன் அவைகளும் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போய்விடும் 

ஒருநாள் இருட்டில் பார்த்தேன் அவைகள் தூங்கி கொண்டிருந்தன. 

தன்   தம்பி பூனையை அண்ணா பூனை  பாந்தமுடன் அணைத்துக்கொண்டு 
தூங்கும் காட்சி என் மனத்தைக் கவர்ந்தது. அப்படி ஓர் அழகு .பார்த்துக்கொண்டே இருக்கலாம் 

உடனே படம்பிடித்தேன். 
அந்த படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று 
7 ஆண்டுகளாக என்னுடைய கணினியில் பத்திரமாக உள்ளது. 

அதை எப்போது பார்த்தாலும் என்னுள்ளத்திலும் பாசம் ஊற்றெடுக்கும் . ஆனால் 
அதை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம். 

அந்த படம் உங்கள் பார்வைக்கு. 




மனித சகோதரர்களும் அவைகள்போல் 
பாசமுடன் இருந்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்? . 

1 கருத்து:

  1. மனித சகோதரர்களும் அவைகள்போல்
    பாசமுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? .

    நல்ல கனவு..!

    பதிலளிநீக்கு