வெள்ளி, 5 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (2)

புச்சுக் குட்டியும் நானும் (2)

பூனைக் குட்டிகளுக்கு ஒரு நாள்தான் 
பால் தட்டில் ஊற்றி வைத்தேன்.
அவைகள் அதை அவசரம் அவசரமாக 
ரோஸ்  நிற நாக்கால் நக்கிக் குடித்து 
தட்டை காலி செய்து விட்டன. 

அப்புறம் என்ன,வாலை  தூக்கிக்கொண்டு
ஒரு சோம்பல் விட்டுவிட்டு 
என்னை ஒரு பார்வை. பிறகு கிணற்று சுவர் 
ஓரமாக போய்  விளையாட 
தொடங்கின. 





அவைகள் ஒன்றுக்கொன்று
கொஞ்சிக்கொண்டு பாசமாக 
விளையாடுவதை பார்ப்பதே
இன்பமாக இருந்தது. 

நான் அவைகளைக் கவனிப்பதைப் பார்த்ததும் 
இரண்டு பூனைக்குட்டிகள் அழகாக போஸ் 
கொடுத்தன 

அந்த படம்தான் கீழே. 






மன அழுத்தம் நீங்க மாத்திரைகள்
விழுங்கத் தேவையில்லை

பூனைகுட்டிகளுடன் சிறிது நேரம்
இருந்தால் போதும்
மனம் லேசாகிவிடும்.

இன்னும் வரும் 

3 கருத்துகள்: