ஞாயிறு, 17 மார்ச், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு



கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு 






சா .கணேசன் அவர்களால் 
வித்திடப்பட்ட 
காரைக்குடி கம்பன் கழகம் 
மரமாக உயர்ந்து ,விரிந்து ,
பரந்து,வளர்ந்து வைர விழா 
ஆண்டை கொண்டாட உள்ளது. 

இந்த மரத்தின் நிழலில்தான் 
எண்ணற்ற தமிழ் பறவைகள் 
தஞ்சம் தேடி ஓடி வந்தன 

தமிழமுதை சுவைத்து 
பருகி மகிழ்ந்தன 

வந்தவர்களுக்கெல்லாம் 
கம்பனின் கவியமுதை 
வாரி வாரி வழங்கின .

இன்று உலகெங்கிலுமிருந்து 
தமிழின் பெருமை அறிந்தவர்கள் ,
தமிழின் மீது காதல் கொண்டவர்கள் கூடி 
எத்தனை முறை கம்பனின்
ராமாயணத்தை படித்தாலும் 
கேட்டாலும் தெவிட்டாத 
இன்பத்தை தரும் அதன் 
மாண்பை வியந்து 
போற்றி மகிழ்கின்றனர் 

அது சரி .வடமொழியில் இயற்றப்பட்டு 
பலயுகம் கடந்த நிலையில் காலமெல்லாம்
நிலைத்து நிற்கின்ற ராமாயணத்தை 
தீஞ்சுவை தமிழில் ஆக்கி தந்த 
கம்பரின் கம்ப ராமாயணத்தை 
தமிழுலகமும் தமிழ் பேசும் மக்களும்
உணர்ந்து போற்றி பயன் பெரும் வகையில் 
நமக்கெல்லாம் வழி காட்டிய 
அந்த பெருமகன்,
தமிழ் தாயின் தவப்புதல்வன் 
திரு. சா. கணேசன் அவர்கள். 

மண் தோன்றுமுன்னரே,கல்
தோன்றுமுன்னரே தோன்றி
தமிழை ஆராய்ந்த குடிமக்கள் 
தமிழ்மக்கள் 

ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட்டதும். 
ஒவ்வொரு செயலுக்கும், உணர்வுகளுக்கும் 
தனி தனியே சொற்கள் அமைந்துள்ளதும் 
எத்தனை முறை ஆராய்ந்தாலும் 
ஒவ்வொரு முறையும் புதிய புதிய
சிந்தனைகளை தோற்றுவிக்கும்  
ஊற்றுக்கண்ணாக விளங்கும் 
தமிழ் தாய் படைத்த நூல்கள் 
எண்ணிலடங்கா 

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
தமிழ் தாயின் தவப்புதல்வர்கள் தோன்றி 
வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் 
தமிழ் நூல்களை படைத்து தமிழுக்கு 
பெருமை சேர்த்தது
மட்டுமல்லாமல் வரலாற்றிலும் 
அவர்கள் இடம் பெற்றுள்ளனர் 
இன்று தமிழை தமிழர்களை விட
பிற மொழியாளர்கள்
கசடற கற்று தமிழின் பெருமையை
உலக அரங்கில் கொண்டு 
சென்று வருகின்றனர். 

ஆனால் தமிழ் பேசும் மக்கள் எப்போதுதான் 
தமிழின்  அருமையை, பெருமையை, 
அதன் வளமையை,அதன் தொன்மையை  
உணரபோகிறார்களோ தெரியவில்லை? 

கம்பனின் மீது கொண்ட காதலால் 
காரைக்குடி கம்பன் கழகத்தை தொடங்கி வைத்த
திரு. சா. கணேசன் பின்னாளில் 
கம்பன் அடிப்பொடி என்று அழைக்கப்பட்டார். 

அவருக்கும் கம்பன் மீதும் அவர் இயற்றிய 
காப்பியமான கம்ப ராமாயணத்தின் மீது 
எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை இனி காண்போம்.

 நன்றி 
ஆங்கில மூலம்
சுகந்தி கிருஷ்ணமாச்சாரி 
(ஹிந்து நாளிதழ் )

The Kamban dream

SUGANTHY KRISHNAMACHARI


This year marks the 75th anniversary of the Karaikudi Kamban Kazhagam, the seeds of which were sown by Saw. Ganesan.
A neat turn of phrase, an apt simile, a brilliant metaphor, the euphony of a word -- can all delight, for the felicitous use of language does give one a frisson of thrill. But even so, will anyone deify a language, not figuratively, but literally? One man did. Kamban Adippodi Saw. Ganesan.


(இன்னும் வரும்) 
படங்கள்-நன்றிgoogle images 

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எல்லாம் தெரிந்தவர்கள் நீங்கள்

      இருந்தாலும் இவன்
      வழி தனி வழி

      சுவையுங்கள்

      நீக்கு