ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

காகங்கள் உணர்த்தும் பாடம்


காகங்கள் உணர்த்தும் பாடம்


இந்த இரண்டு காகங்களும் உணர்த்தும் கருத்து என்ன?
ஒரு காகம் வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு காகம் தரையை பார்த்துக்கொண்டிருக்கிறது
இரு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவன் சிறை கம்பிகளின் வழியாக
முதல் காகத்தை போல் வானத்தை பார்த்துகொண்டிருந்தான்.
ஆஹா இந்த வானம் எவ்வளவு அழகாக இருக்கிறது.
இந்த நட்சத்திரங்கள் எவ்வளவு அழகாக
ஒளி வீசி கொண்டிருக்கின்றன.
இந்த இரவு எவ்வளவு அமைதியாக இருக்கிறது
என்று ரசித்து கொண்டிருந்தான்.
மேலும் மாபெரும் தலைவர்கள் நம் நாட்டிற்காக
சிறை சென்றதும் பல தியாகங்கள் புரிந்ததும்
அவன் நினைவிற்கு வந்தது.
அவன் தான் சிறையில் இருப்பதை பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் மற்றொருவனோ இரண்டாவது காகத்தை போல்
தரையை பார்த்துகொண்டிருந்தான்.
அவன் மனதிலோ தான் சிறைக்கு வந்துவிட்டோமே
தன் குடும்பம் என்ன ஆகுமோ,
தன் வாழ்க்கையோ இந்த சிறையிலேயே முடிந்து விடுமோ,
இனிமேல் தனக்கு எதிர்காலமே இல்லையோ
என்றெல்லாம் கவலைப்பட்டு கொண்டு
அமைதிஇல்லாமல் தவித்து கொண்டிருந்தான்


இருவரும் சிறையிலும் அடைக்கபட்டிருந்தாலும்
ஒவ்வொருவரின் மனநிலையில் வேறு வேறு சிந்தனைகள்.
ஒன்று நேர்மறை சிந்தனை மற்றொன்று எதிர்மறை சிந்தனை.


எங்கிருந்தாலும்,எந்த நிலைக்கு வந்தாலும்
நம் நம்பிக்கையை தளரவிடக்கூடாது.
வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள
மனதை பழக்க வேண்டும்
அப்போதுதான் தோல்விகளையும் வெற்றி படிக்கட்டுகளாக
மாற்ற முடியும் 
நீங்கள் எப்படி?நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக