ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அண்ணலும் அண்ணாவும்


அண்ணலும் அண்ணாவும்








அண்ணல் மகாத்மாகாந்தியின் 
படம் ரூபாய் நோட்டில் 
இல்லையென்றால்
அது செல்லாது.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை பயன்படுத்தாமல்
தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.
உண்மையே பேசி நாட்டிற்கு 
சுதந்திரம் பெற்று தந்தார் காந்தி அன்று
பொய்களை பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்
 நாட்டை ஆளுபவர்கள் இன்று
அந்நியனை அடிபணியவைக்க அமைதி வழியில்
உண்மையிலேயே உண்ணா நோன்பு 
மேற்கொண்டார் காந்தி அன்று
சுய விளம்பரத்திற்காக வயிற்றை  முன்பே நிரப்பிக்கொண்டு 
உண்ணா நோன்பு மேற்கொண்டு கேலி கூத்தாக்கிவிட்டனர் இன்று
காமராஜர் காட்டிய வழியில் செல்ல மறுத்த
காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்தது.
அண்ணா காட்டிய வழியில் சென்ற கழகம் 
ஆட்சியில் தொடர்ந்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக