ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி

பிளாஸ்டிக் பயன்பாடுகளை 
குறைக்க எளிய வழி

சென்ற நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்
அது தன்னை நிரந்தரமாக மக்களை கவர்ந்துவிட்டது 
அது மக்களோடு மக்களாய் கலந்துவிட்டது 
கருவறையிலிருந்து கல்லறை வரை 
அது மனிதர்களோடு பிரயாணம் செய்து 
அவர்களோடு உறவாடுகிறது.

இன்று உண்மையான மணமுள்ள  மலர்களை விட வண்ண வண்ண 
மணமற்ற பிளாஸ்டிக் மலர்களே அலங்கார பொருளாக் பயன்படுகிறது
உலோக பாத்திங்களை விட பிளாஸ்டிக் டப்பாக்களே 
அதிக அளவில் மக்களால் வாங்கப்படுகின்றன

இவ்வளவு செய்யும் அது மக்களுக்கு தீராத தலைவலியை தரும் 
என்று கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது

அது நுழையாத துறையே கிடையாது. 
மக்கள் அதற்க்கு அடிமையாகிவிட்டார்கள் 

எப்படி புகை பிடிப்பவன் புகை பிடித்தால் தனக்கும் சுற்றி இருப்பவர்க்கும் 
புற்று நோய் வரும் என்று தெரிந்திருந்தும் புகையை உள்ளே இழுத்து வெளியே தள்ளி இன்புறுகின்றானோ அதைபோல்தான்.பிளாஸ்டிக்கும் புற்றுநோய் தரும் 
என்று தெரிந்தும் மக்கள் அதை வெறுப்பதில்லை

மாறாக குழந்தை பிறந்தவுடன்  அந்த காலத்தில் தன் விரலைதான் சூப்பும் 
ஆனால் இன்றோ அதன் வாயில் நிப்பிளை சொருகிவிடுகிரார்கள் 
அதுவும் அந்தநிப்பிள்  தன் தாயினுடையது என்று நம்புகிறது 
எப்படி பசுவுக்கு முன் செத்த கன்றுக்குட்டியின் உடலில் வைக்கோலை 
அடைத்து வைத்து  அது அதன்கன்று என்று ஏமாற்றி பாலை 
கறக்கிறார்களோ அதுபோலதான்  இந்த செயலும்.

இன்று அதிகமாக பிளாஸ்டிக் மெல்லிய பைகளும், 
தண்ணீர் பாகேட்டுகளும், குடிக்க பயன்படுத்தும் 
குவளைகளும் பயன்படுத்தப்படுகின்றன. 
எல்லா இடங்களிலும், எல்லா மனிதர்களாலும்
 பயன்படுத்தப்படுகின்ற இந்த பொருட்கள் பயன்பாடு 
முடிந்தவுடன் கண்ட இடங்களில் வீசி எறியப்படுகின்றன .

அவைகள்தான் இன்று பெருமளவில் நம் நாடு முழுவதும் 
குவிந்து போய் சுகாதார கேடுகளையும்,
சுற்று சூழல் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டன

அதனால்தான் இப்போது எங்கு பார்த்தாலும் 
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைக்கப்படவேண்டும் 
என்று பேசப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, பிளாஸ்டிக் குவளைகளுக்கு பதிலாக மண்ணால்
செய்யப்பட்ட குவளைகளை பயன்படுத்தினால் 
பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறையும் 
சுற்று சூழலுக்கு ஆபத்து ஏற்படாது. 
மண்பாண்ட தொழிலாலர்களுக்கும் வேலை வாய்ப்பு  ஏற்படும்.
அவர்களின் வாழ்வும் மலரும். 
உதாரணத்திற்கு  ஐஸ்கிரீம், தயிர்,பாயசம் ,குடிநீர்,போன்றவற்றை 
கொடுப்பதற்கு மண்ணினால் செய்யப்பட்ட குவளைகளை பயன்படுத்தலாம்.

உணவு விடுதிகளில், நடைபாதை கடைகளில், அரசு மதுக்கடைகளில், 
அரசு துறை விழாக்களில், அரசு அலுவலகங்களில், 
,எங்கெல்லாம் குவளைகள் பயன்பாடு இருக்கிறதோ 
அங்கெல்லாம். இதை செயல்படுத்தினால் 
பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறையும். 

அரசு இதை கவனத்தில் கொண்டு ஆணை பிறப்பித்து
இந்த திட்டத்தை செயல்படுத்தினால். நல்ல பயன் கிடைக்கும்.

 திருமணம் போன்ற விழாக்களில் விருந்துகளில்
 இதை முதலில் செயல்படுத்த தொடங்கினால் 
மற்றவர்களும் இந்த முறையை பயன்படுத்த தொடங்குவர் என்பது நிச்சயம்.  

1 கருத்து: