சனி, 29 செப்டம்பர், 2012

வானமே கூரையாக வாழும் மக்களே


வானமே கூரையாக வாழும் மக்களே



வானமே கூரையாக வாழ்கின்ற மக்களே
உங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் யார் ?
ஐந்தாண்டுக்கொரு முறை ஆட்சிகள் மாறும் ;
அமையும் அரசில் சில ஆட்கள் மாறுவார்கள்
அரசுகள் என்றும் உங்களைப்பற்றி
அக்கறைப்படபோவதில்லை ;

உங்களுக்கு வாக்குரிமை இல்லாமையால்
கவலைப்படவும் போவதில்லை

உங்களைப்பற்றி எந்நாளும்
உங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்
சமூகமும் உங்களை பற்றி கவலைப்படபோவதில்லை

நான்கு சுவர்களுக்குள் வாழும் மக்களுக்கே
பாதுகாப்பில்லை ;

உங்களுக்கு எதற்கு  பாதுகாப்பு ?
அது சரி, என்ன இருக்கிறது உங்களிடம்
வைத்து பாதுகாக்க ?

இருக்க வீடு கிடையாது
நடைபாதைகளும் பாழடைந்த கட்டிடங்களும்
மரத்தடிகளும்தான் நீங்கள் வசிக்கும் மாளிகைகள்

உடுக்க நல்ல உடை கிடையாது
குளிக்க ,குடிக்க சுத்தமான நீர் கிடையாது
உண்ண நல்ல உணவு கிடையாது
நோய் வந்தால் மருத்துவ உதவி கிடையாது
கல்வி அறிவு கிடையாது

எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியற்று வாழும்
மக்களிடையே நீங்கள் எதுவுமே இல்லாமல்
எப்படி மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் ?
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
கேட்டுக்கொள்ளுகிறோம்

உங்கள் கூட்டத்தில் நல்லவர்களும் உண்டு
நய வஞ்சகர்களும் உண்டு
நாணயமானவர்களும் உண்டு
நச்சு பேய்களும் உண்டு ;

வாழ்ந்து கெட்டவர்களும் உண்டு
வாழ துடிப்பவர்களும் உண்டு

வயதானவர்களும் உண்டு
பக்தர் போல் வேடமிட்டு
 பிச்சை எடுப்போரும் உண்டு
எத்தர்களும் உண்டு ,பித்தர்களும் உண்டு

என்றாலும் நீங்கள் இந்திய குடிமக்கள்
ஒட்டுரிமையில்லாத எங்கும் ஓடவும் முடியாத
சமூக விரோதிகளின் கைப்பாவையாக
சுரண்டப்படும் சமூகம்

இந்நாட்டில் கோடீஸ்வரர்கள் குடித்து கும்மாளமிட
நீங்களோ கால் வயிற்று கூழுக்கு வழியின்றி
பசியினால் தள்ளாடி வாழ்நாளை தள்ளிவிட

வாழ்க சுதந்திரம் .
வாழ்க இந்திய நாடு .

உங்கள் கூட்டம் நாள்தோறும் பெருகிவருவது
காலத்தின் கட்டாயம்
Posted by Picasa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக