செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி

இன்பமும் துன்பமும்
இயற்கையின் நியதி 
இதை உணர்ந்தவன் உள்ளத்தில் 
என்றும் அடைவான் அமைதி 
அவன் என்றும் படமாட்டான் அவதி 

உறவும் பிரிவும் மனிதர்களின் இயல்பு 
உறவினால் இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம்
பிரிவும் துன்பத்தை முதலில் தந்தாலும் 
இன்பத்தை பின்னாளில் அது நிச்சயம் தரும்

பெண்ணை பெற்ற தந்தை 
திருமணத்தின்போது
மகளை பிரியலாம்
பிரிந்த பெண் தன் கணவனோடு மகிழ்சியாக 
வாழ்வதை கண்டால் உண்டாகும் இன்பம்

அதே நேரத்தில் பெண்ணை திருமணம் 
செய்யாது வீட்டில் வைத்திருந்தால் 
காலமெல்லாம் துன்பம்

பொருட்கள் மீதும் மனிதர்கள்மீதும் 
பற்று வைத்தால் என்றும் துன்பம்தான்
ஏனென்றால் என்றாவது ஒருநாள் 
அவைகள் நம்மை விட்டு விலகும்
இல்லையேல் நாம் அவற்றை 
விட்டு விலக நேரிடும். 
இரண்டு நிலையிலும் துன்பம்தான்.  

எனவே பற்றற்று இருப்போம் 
ஆனால் பாசமுடனும்   இருப்போம் 
அவைகள் நம்முடன் இருக்கும்வரை 

அதே சமயம் மகிழ்ச்சியோடு 
விடை கொடுக்க கற்றுகொள்ளுவோம். 
அவைகள் நம்மை விட்டு விலகும்போது. 

1 கருத்து: