ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)
அந்த காலத்தில் தெருவில் 
சாக்கடைகளை  விடுவதும் கிடையாது 
இந்த காலம் போல் சாக்கடையின்
பக்கத்திலேயே உணவு கடைகளை திறந்து 
சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்றதும் கிடையாது
மக்களும் அவைகளை தின்றுவிட்டு நோயில்
படுத்ததும் கிடையாது 
ஏன் கிராமங்களில் 
பொதுவாக உணவு விடுதிகளே கிடையாது 

பொதுவாக வீட்டின் பின்புறம்தான் சாக்கடைகள் இருக்கும். 
சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து 
வெளியேறும் தண்ணீர் பின்பக்கத்தில் உள்ள 
செடி கொடிகளுக்கு போகும்.வீட்டிற்கு தேவையான
காய்கறி செடிகள் பின்புறம் நன்றாக செழித்து வளரும்.
ரசாயன் உரம் என்று ஒன்று அக்காலத்தில் கிடையாது
எல்லாம் இயற்கை உரம்தான்
காய்கறிகளும் சுவையாக இருக்கும்

 வீடுகளில் கழிவறைகளே கிடையாது 
அதனால் கொசுக்களும் ஈக்களும் அங்கு கிடையாது 
ஆனால் இன்று கழிவறை மேலேதான் வீடுகளை கட்டிக்கொண்டு அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம். 
கொசுக்கடிகளினால் தினமும் துன்புருகின்றோம். 

வீட்டின் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி குப்பை
 கொட்டுவதற்காக பள்ளம் வெட்டப்பட்டு 
அதில்தான் அனைத்து குப்பைகளும், மாடுகளின் சாணம் 
,மற்ற கழிவுகளெல்லாம் கொட்டப்படும்
சாணத்தின் மேல்புறம் கதிரவனின் சூட்டினால் காய்ந்துவிடும். .
ஈரமாக் இருக்கும் உட்புறத்தில் பூச்சிகளும் புழுக்களும் சுகமாக வாசம் செய்யும்.  
தோட்டத்தில் இருக்கும் பறவைகளும், கோழிகளும் குப்பையை நன்றாக கிளறி கொடுத்து அவைகளை நன்றாக மக்க செய்வதுடன் அவைகளின் வயிறையும்  நன்றாக நிரப்பிக்கொள்ளும் 
தன் குஞ்சுகளுக்கும் அதே நேரத்தில் பயிற்சியையும் கொடுத்துவிடும். 

அந்த காலத்தில் எல்லாம் மக்கும் குப்பைகள்தான். 
மக்காத  குப்பைகள் என்று ஒன்றும் கிடையாது
ஏனென்றால் உணவுகளை சாப்பிடுவது ஏதாவது ஒரு இலைகளில்தான். 
வருடத்திற்கு ஒருமுறை அந்த பள்ளத்தில் சேரும் மொத்த  குப்பைகளும்
பின்புறத்தில் உள்ள மரங்களிலிருந்து கழிக்கப்பட்ட இலை மற்றும் தழைகளும் 
பயிரிடும்நிலத்திற்கு கொண்டு சென்று உரமாக பயன்படுத்தப்படும். 
இக்காலத்தைபோல் ரசாயன் உரங்களோ ,பூச்சி மருந்துகளோ நம் நாட்டில் கிடையாது 
நிலங்களில் பறவைகள் அங்கு பறக்கும் பூச்சிகளை தின்று விடும். 
பயிர்களை அழிக்கும் எலிகளை பாம்புகள் தின்றுவிடும்.
அப்படியும் எலிகள் அதிகமாக இருந்தால் இருளர்கள் பிடித்து விடுவார்கள். 
வரப்புகளில் முளைக்கும் புற்களும்,வைக்கோலும்தான் மாடுகளுக்கு உணவு அதை தவிர எள்ளு பிண்ணாக்கும், கடலை பிண்ணாக்கு, வீட்டில் மிகுந்த உணவு பொருட்கள், தவிடு போன்றவைதான் அவைகளுக்கு உணவு. பால் மிகவும் சுவையாக் இருக்கும். அதிலிருந்து எடுக்கப்படும் நெய்யின் நறுமணம் இக்கால மக்களுக்கு தெரியாது. 

இன்று நிலங்களும் இல்லை பயிர்களும் இல்லை அதனால் மாடுகள்  
காகிதங்களையும்  சினிமா போஸ்டர்களையும்  தின்கின்றன. 
அதனால் அது கொடுக்கும் பாலில் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. அது பல நோய்களை மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் தருகின்றன .

பசுக்களை இயற்கையாக கருவூட்டல்தான் நடக்கும் இக்காலதைபோல் போல் செயற்கை கருஊட்டலோ, ஊசி போட்டு மாடுகளை சித்ரவதை செய்யும் முறைகள் கிடையாது. 

பாதாம்  மரத்தின் இலைகளை பறித்து அதை நன்றாக வெயிலில் உலர்த்தி  சணல் சாக்கு பைகளில் வைத்திருப்பார்கள்.  அதைபோல்தான் ஆல மரத்தின் இலைகளையும்.மந்தாரக் கொடியின் இலைகளையும் .வீட்டில் உள்ள வயதான பெண்மணிகள்  காலை வேலைகளை முடித்து விட்டு உணவு உட்கொண்டபின், தினம் கொஞ்சம் இலைகளை தண்ணீர் தெளித்து ஈரமாக்கி வைத்திருப்பார்கள். பிறகு அவைகளை பிரித்து அடுக்கி ஒரு கல்லை அதன்மீது வைத்திருப்பார்கள். 
அது நன்றாக படிந்து இருக்கும் .பிறகு அவைகளை கொண்டு வட்ட  வடிவமாக இலைகளை, விளக்குமாறு ஈர்க்குகளை இரண்டாக பிளந்து வைத்துக்கொண்டு அதைகொண்டு ஒருவொருக்கொருவர் அளவளாவிக்கொண்டே அழகாக  இலைகளை வட்ட வடிவமாக தைப்பார்கள். 
அந்த காலத்தில் இலைகளை தைத்து சில ஏழை குடும்பங்கள் வயிற்றை கழுவியதும் உண்டு

சாப்பிடும் முன் கை கால்களை கழுவிக்கொண்டு இலைகளை நீர் தெளித்து சுத்தம் செய்தபின்தான் உணவு உண்பார்கள்.அதனால் வயிற்றுபோக்கு போன்ற வியாதிகள் அவர்களை அண்டியதில்லை. குடிநீரை வடிகட்டியோ அல்லது காய்ச்சியோதான் அருந்துவார்கள்

இக்காலம்  காலம் போல் எந்த தண்ணீரையும் அது  தூய்மையானதா என்பதை ஆராயாதும், கண்ட இடங்களில் அசுத்தமான சூழ்நிலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் உண்டு விட்டு பலவிதமான நோய்களை தானாகவே வரவழைத்துக்கொண்டு துன்புறுகின்றனர் (இன்னும் வரும்) 
.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக