சனி, 18 ஆகஸ்ட், 2012

மக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது?


மக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது?

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததை 
மக்கள் சுற்றி நின்று  அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த  செயல்

மேற்கண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த கண்டன குரல்கள் எழுந்தன

குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் வழக்கம்போல குரல் முழக்கம் எழுப்பி அறிக்கைகள் விட்டு தங்கள் கடமையை முடித்து கொண்டன 

மக்கள் ஏன் இந்த பாதக செயலை தடுக்கவில்லை என்று சிலர் கேள்வி கேட்கின்றனர் 

ஆனால் இதற்க்கு காரணம் ஏன் என்று யாரும் ஆராய்வதில்லை 

மக்களின் மனம் இந்த அளவிற்கு மரத்து போவதற்கு யார் காரணம் ?

பத்திரிக்கை துறையும் தொலைகாட்சி மற்றும் திரைப்பட துறையினரும்தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்ர் 

இன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் இல்லாத பத்திரிகைகளோ தொலைகாட்சி தொடர்களோ திரைப்படமோ இல்லை என்பதை அனைவரும் அறிவர்
பெண்களை பெண்களே துன்புறுத்துவதும் கொடுமைபடுத்தப்படுவதும்  சிறுமைப்படுத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி கிவிட்ட நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை 

தினம் தினம் இந்த காட்சிகளை சிறுவர்முதல் மண்டையை போடபோகும் கிழங்கள் வரை ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர்

அந்த காட்சியை நேரில் பார்க்கும்போது அவர்களுக்குள் எந்த உணர்சிகளையும் ஏற்படுத்தவில்லை என்பதே மக்கள் அவ்வாறு நடந்துகொண்டவிதம்

இனிமேலாவது இதுபோன்ற காட்சிகளில் நடிக்க பெண்கள் .முன்வராமல் இருப்பார்களா?
திரைப்படம்தொலைகாட்சி தொடர்களில், பத்திரிகைகளில் இவைகள் தவிர்க்கப்படுமா? 

குற்றம் புரிபவனை விட குற்றத்தை தூண்டுபவர்களுக்குதான் அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்பதுதான் மரபு 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக