வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தமிழன் என்றொரு இனமுண்டு

தமிழன் என்றொரு இனமுண்டு 
தனியே அதற்கொரு குணமுண்டு
அது என்ன ? 
அவர்கள் சுத்த மண்டு 
வெட்டி பேச்சு பேசியே காலத்தை கழிப்பது

யார் எதை சொன்னாலும் எப்படி,ஏன் ,எவ்வாறு என்பதை ஆராயாமல் 
அதை அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி கையில் 
உள்ள காசை முழுவதையும் அவர்கள் கையில் கொடுத்து விடுவது
ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் புலம்பி அழுது ஒப்பாரி வைத்து திரிவது 

கடவுளின் பெயரால் மத தலைவர்கள் கூறுவதை அப்படியே நம்பி 
தமிழ்நாட்டில் ஐம்பது கோடியும் அகில இந்திய அளவில் 500கோடியும்
வீடு கட்டி தருவதாக கூறி தொகையை பொதுமக்களிடமிருந்து வாங்கி ஏப்பம்  விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டது ஒரு கும்பல்.காவல்துறை தேடுகிறது 

 ஈமு கோழிகள், கொப்பரை தேங்காய் ,வைப்பு தொகைக்கு அதிக வட்டி 
என எதை கொண்டு வேண்டுமானாலும் தமிழக மக்களை ஏமாற்றலாம்
கையில் காசை வைத்துகொண்டு ஏமாறுவதற்கு தயாராக காத்துகொண்டு இருக்கிறார்கள் 

படித்தவன் ,படிக்காதவன் என்று பாகுபாடே கிடையாது அனைவரும் ஏமாளிகள் 

ஏமாந்தபிறகு அழுது புலம்பி தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கும் கோமாளிகள்

பணத்தை அழும்போது காவல்துறை நினைவுக்கு வாராது அவர்களுக்கு மொத்த பணமும் பறிபோன பிறகு காவல்துறையும் அரசும் நினைவுக்கு வரும் இந்த மூடர்களுக்கு 
இலங்கை பிரச்சினையில் தமிழ்நாட்டின் முன்னால் முதல்வரே மத்திய  மந்திரியின் பேச்சை கேட்டு ஏமாந்து உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று அறிக்கை விடுகிறார்.
தலைவன் எப்படியோ அவரின் குடிமக்களும் அப்படியே  

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுகின்றன

இதுவரை மோசடியில் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும்.இழந்த தொகையோ பல ஆயிரம் கோடி ருபாய் இருக்கும் .
பெரியார் பிறந்த மண்ணில் மக்கள் எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி மோசம் போவது மிகவும் வருந்துதர்க்குரியது

எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் பேராசைதான்

பேராசை பெரும் நஷ்டம் என்ற பழமொழியை மாற்றி பேராசை தரும் பெரு நஷ்டம் என்று தமிழ் நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் நாள் வருமா?

கேள்விக்குறிதான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக