ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

சிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா ?

சிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா ?

பத்தினி தெய்வமாக போற்றப்படும் கண்ணகி
வன்முறையில் ஈடுபட்டது முறையா ?

தன்னுடைய கணவன் கோவலனை
முறையாக விசாரணை செய்யாது
கழுவிலேற்றிய பாண்டியமன்னனிடம்
நேரடியாக சென்று நீதி கேட்ட கண்ணகி .
தன் தவறை உணர்ந்த மன்னனும்
அவன் மனைவியும் உயிர் துறந்தனர்

ஆனால் அத்தோடு விடாமல்
தன் கணவனின் கொலைக்காக
மதுரை நகரையே எரித்து நாட்டிற்கும்
மக்களுக்கும் துன்பம் விளைவித்தது
எந்த விதத்தில் நியாயம் ?

அன்றே தனி மனிதன் ஒருவனுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு
பொது மக்களையும் பொது சொத்துக்களையும்
அழிக்கும்வன்முறை முறை கலாசாரத்திற்கு
வித்திட்ட கண்ணகிஎப்படி தெய்வம்
என்று போற்றப்படமுடியும் ?

பல நூற்றாண்டுகள் கடந்தபின்பும்
இந்த வன்முறைகலாசாரம் இன்றுநாடு முழுவதும்
ஏன் உலகம் முழுவதும் பரவிவிட்டது
என்பதைமறுக்க முடியாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக