செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சிலைகள் என்ன செய்யும் ?

சிலைகள் என்ன செய்யும் ?


ஆத்திகராய்    இருந்த  ஈரோடு  ராமசாமியை 
சாதியை  எதிர்த்து  போராடும்  பெரியாராக  மாற்றி 
போராட்ட பாதையில்  செலுத்தியது  யார்  தெரியுமா ?
விக்டோரியா  மகாராணியோ  அல்லது  
வேல்ஸ்  இளவரசரோ  அல்ல 
உழைக்கும்  மக்களை  ஊருக்கு  வெளியே  
ஒதுக்கி  வைத்து  கேடு விளைவித்த  
இங்குள்ள  ஒரு   சில  பிரிவினரே .

பெரியார்  சிலை  வைத்தால்  ஏன்  பதறுகிறீர்?
சிலைகளால்  என்ன  செய்ய  முடியும்  ?
நீர்  கொண்ட  கொள்கைகளில்  உறுதியாய்  இருந்தால் 
சிந்திப்பீர் .அழிவு  செயல்களில்  ஈடுபட்டு  பிறருக்கு 
துன்பம்  விளைவிக்கும்  எண்ணங்களை  விட்டோழிப்பீர் .


பெரியார் சிலைகலாகட்டும்  அல்லது
பெருமாள்  சிலைகலாகட்டும் 
அவைகள்  ஒன்றும்  செய்வதில்லை  
வைத்த இடத்தில  அப்படியேதான்  இருகின்றன 





















அதை  வைப்பவர்கள்தான்  ஒருவரைஒருவர்  
அறிவில்லாமல் அடித்துக்கொள்கிறார்கள்  
அவரவர்கள் தங்கள்  கொள்கைகளை 
 நிலை  நாட்டும்  பொருட்டு 

சிலைகள்  சிலையாய்  இருக்கும்போது  
தோன்றாத  பிரச்சினைகள்   அதை  
உடைக்கும்போது மட்டும் தோன்றுவதேன்  ?
ஏனெனில்  அச்செய்கை  அதை நிறுவிய 
மனிதர்களின்  உணர்வுகளை 
பாதிப்பதினால்தான் 

உணவோடு  விளையாடினால்  
உடல்நலம்  பாதித்து 
உயிர் போவது போல்  
மக்களின் உணர்வோடு விளையாடினால் 
பலியாகும் பல உயிர்கள் 

அவரவர்  கருத்துக்கு  மதிப்பளித்து  
ஆக்குவோம்  இந்த  உலகை 
அமைதிபூங்காவாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக